பொன் முட்டை இடும் பணிப்பெண்கள்!

Sunday, July 24, 2011

சவூதி அரேபிய எஜமானாரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண்ணின் குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபாய் வரை இரத்தப் பணமாக வழங்கப்படுகின்றது. பவானிதேவி சின்னையா. வயது 36. மஸ்கெலியாவைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர்.


2008 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சென்று இருந்தார். கடந்த ஜனவரி 19 ஆம் திகதி எஜமானரால் படுகொலை செய்யப்பட்டார். இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் சடலம் இம்மாத ஆரம்பத்தில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கும், கொலைகார எஜமானரின் குடும்பத்தினருக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றன. பணிப்பெண்ணின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்க வேண்டும் , இரத்தப் பணமாக 50,000 சவூதி ரியால் வழங்குவார்கள் என்று கொலைகார எஜமானரின் குடும்பத்தினர் சொல்லி இருக்கின்றார்கள். மன்னிப்பு வழங்க தயார் என்று பவானிதேவியின் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். இத்தகவலை தூதரகம் வெளியிட்டு உள்ளது.