ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழ முகவர்கள் ஊடாக நீங்கள் கொடுக்கும் பணம் முகவர்களின் சுகபோக வாழ்வுக்கே பயன்படும்

Monday, June 6, 2011

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதிர்கால தமிழ் இனம் சுதந்திரமாக எதிரியிடம்
மண்டியிடாமலும் வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்திய தமிழ் பெண்கள் இன்று அனாதைகளாக கைவிடப்பட்டுள்ளனர்.

இவர்களின் பெயரில் ஜரோப்பிய, அவுஸ்ரேலிய, அமெரிக்க மற்றும் கனடா போன்ற சுமார் 40 இற்கு மேற்பட்ட நாடுகளில் சேகரிக்கப்படும் பணம் எவரை சென்றடைகிறதோ அது இறைவனுக்கும் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

 மற்றவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக யுதத்தில் தம்மை அங்கவீனர்களாக்கிய இந்த இளம் பெண்களின் அழுகுரலைக் கேட்டுப்பாருங்க
ள் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளே ஜரோப்பாவில் பணம் கேட்டு வருபவர்களிடம் பணம் கொடுக்காதீர்கள். இத்தகைய அங்கவீனமானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு நேரடியாக உங்கள் தாயக உறவுகளின் ஊடாக மட்டும் உதவி செய்யுங்கள்.
  
முகவர்கள் ஊடாக நீங்கள் கொடுக்கும் பணம் முகவர்களின் சுகபோக வாழ்வுக்கே பயன்படும்.