புதிய வைரஸ் எச்சரிக்கை

Thursday, September 23, 2010


கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.


“Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது.


உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது' என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது.

இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு. இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது.

இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது.

இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது.

மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது. இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம்.

ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது? நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும்.

இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும்.

இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது. இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

தலைகீழான வீடு - படங்கள் இணைப்பு!

ஜேர்மன் நாட்டில் மக்களை கவரும் நோக்கில் ஒரு கண்காட்சி நிறுவனம் இந்த தலைகீழான வீட்டை வடிவமைத்துள்ளனர். இந்த வீட்டினுள் இருக்கும் அனைத்து பொருட்களும் தலை கீழாக இருக்கும் வண்ணமே அவர்கள் இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர்.

இந்த வீட்டை வடிவமைக்க அவர்களுக்கு ஆறு மாதங்கள் பிடித்ததாகவும், இது மிகவும் கடினமானதாக இருந்ததாகவும் ஆனால் அவர்களது ஊழியர்கள் அதனை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் என அந் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இரு வாரங்களுக்கு முன் மக்கள் பார்வைக்காக இந்த வீடு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வீட்டை வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த வீட்டை பார்வையிடும் மக்கள் தமக்கு வீட்டினுள் நிற்க தலை சுற்றுவது போல் உணர்வதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

100 கோடி பக்கங்கள்…

4

கம்ப்யூட்டர்களில் தகவல்களை சேமித்து வைக்க `ஹார்டு டிஸ்க்’ எனப்படும் நினைவுத்தகடு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல செல்போன்கள், டிஜிட்டல் கேமிராக்கள் போன்றவற்றில் தகவல்களை பதிவு செய்ய `மெமரி கார்டு’ வசதி உள்ளது.

கொள்திறனுக்கு ஏற்ப இந்த நினைவுத்தகடுகள் கிடைக்கின்றன. ஆரம்ப காலகட்டங்களில் இந்த நினைவுத்தகடுகள் அளவில் பெரிதாக இருந்தன. தொழில்நுட்பம் வளரவளர சிறிய ஸ்டாம்ப் அளவில் உள்ள மெமரி கார்டில் பலநூறு பக்கங்கள் உள்ள தகவல்களை சேமிக்கும் வசதி உருவானது. இப்போது நானோ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதைவிட பலமடங்கு சேமிப்பு வசதி, ஆனால் மிகச்சிறிய மெமரி கார்டு என்ற அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் வந்துள்ள புதிய தொழில்நுட்பம் தான் `நானோ டாட்ஸ்’. அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பகுதியைச்சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த நானோ டாட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மெமரி கார்டு என்பது ஒரு சதுர அங்குலம் அளவில் இருக்கும்.

இந்தச் சிறிய `சிப்’-ல் லட்சக்கணக்கான `நானோ டாட்’ கள் இடம்பெற்று இருக்கும். இவை காந்த தொழில்நுட்பத்தில் இயங்கும். அடுத்த கட்டமாக லேசர் தொழில்நுட்பத்தில் இதை இயக்கும் வகையில் ஆய்வுகள் நடக்கிறது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் இதைவிட அதிக அளவில் தகவல்களை சேமிக்கும் வகையில் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் மெமரி கார்டுகள் தயாரிக்கப்படும்.

பழைய உணவு விஷமாகும்

Tuesday, September 21, 2010

பொதுவாக சைவ உணவுக‌ளை இ‌ன்று சமை‌த்து நாளை‌க்கு சா‌ப்‌பி‌ட்டா‌ல் அது கெ‌ட்டு‌ப் போ‌ய் இரு‌க்க வா‌ய்‌ப்பு‌ண்டு. அதே சமய‌ம், அசைவ உணவுகளாக இரு‌ப்‌பி‌ன், அது கெ‌ட்டு உடலு‌க்கு ஒ‌வ்வாமையை ஏ‌ற்படு‌த்தவு‌ம் வா‌ய்‌ப்பு‌ண்டு. ‌

பி‌ரியா‌ணி, ‌மீ‌ன், மு‌ட்டை, கோ‌ழி‌க்க‌றி போ‌ன்ற அசைவ உணவுகளை ச‌ரியாக சமை‌க்காத ப‌ட்ச‌‌த்‌திலோ, அ‌ல்லது நா‌ம் சமை‌த்த அசைவ உணவு ச‌ரியாக பத‌ப்படு‌த்த‌ப்படாத ‌நிலை‌யிலோ, மறுநா‌ள் எடு‌த்து வை‌த்து சா‌ப்‌பிடு‌ம் போது உணவே ‌விஷமாகு‌ம் சூ‌ழ்‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் உடலு‌‌க்கு ஒ‌‌வ்வாமை, வா‌ந்‌தி, பே‌தி, தோ‌ல் நோ‌ய்க‌ள் ஏ‌ற்படவு‌ம் வா‌ய்‌ப்பு‌ண்டு.

சைவ உணவுக‌ளிலு‌ம், கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி கு‌ளி‌ர்பதன‌‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து ‌பிறகு சமை‌ப்பது, குழ‌ம்பை எடு‌த்து வை‌த்து மறுநா‌ள் சூடா‌க்‌கி சா‌ப்‌பிடுவது போ‌ன்றவையு‌ம், வ‌லிய செ‌ன்று நோ‌ய்களை நா‌ம் தேடி‌க் கொ‌ள்ளு‌ம் முறையாகு‌ம். உணவு‌ப் பொரு‌ள் ‌மீதமானா‌ல் யாரு‌க்காவது கொடு‌ப்பதோ அ‌ல்லது தூ‌க்‌கி எ‌றி‌வதோ ந‌ல்லது. சா‌ப்‌பிடு‌கிறே‌ன் எ‌ன்று உட‌ம்பை கெடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?

கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா? அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.


1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.

2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.

3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.

4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது
Delete All பட்டனைத் தட்டுங்கள்.

5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும்
பைல்களை அழித்துவிடும்.

மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் பயன்படுத்துவதால் சாதகமான மருத்துவ பயன் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சி வெளிவந்துள்ளது.டீன்ஏஜ் மனஅழுத்த நோயாளிகள், இன்டர்நெட் பார்ப்பதால் குணமாகலாம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ‘இன்டர்நெட் செல்ப் ஹெல்ப் பார் டெப்ரஷன்’ என்ற தலைப்பில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய பேராசிரியர் சுவனா சேத்தி ஆய்வு நடத்தினார்.

மனஅழுத்தம் கொண்ட டீன்ஏஜ் வயதினரை தேர்வு செய்து, இன்டர்நெட்டில் மனநலம் குறித்த தகவல் பரிமாற்ற இணைய தளங்களை பார்த்து வர செய்தார். இணைய தளங்களில் மனஅழுத்தத்துக்கு மருத்துவ நிபுணர்களின் கலந்துரையாடல், சிகிச்சை ஆலோசனைகள் பெற்ற டீன்ஏஜ் வயதினர், பாரம்பரிய சிகிச்சை பெற்றவர்களைவிட வேகமாக குணமானது தெரிய வந்தது.

டாக்டரிடம் நேரில் மனஅழுத்த பாதிப்புகளை விளக்குவதை விட ஆன்லைன் ஆலோசனை தளங்களில் பதிவு செய்வது துல்லியமாக இருப்பதால், நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகளால் மனஅழுத்தம் வேகமாக குறைகிறது.

டாக்டர்களில் நேரில் ஆலோசனை பெறச் செல்லும் இளைஞர்கள் பல விஷயங்களை தெரிவிக்க மறந்து விடுகின்றனர். இதனால், சிகிச்சை சரியாக அமையாமல் பிரச்னை நீடிக்கிறது என்கிறார் டாக்டர் சுவனா சேத்தி.

எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் சா‌ப்‌பிட வே‌ண்டிய பழ‌ம்

எ‌ளிமையாக, ‌மிக ‌விலை‌க் குறை‌ந்த பழமாகவு‌ம் உ‌ள்ளது வாழை‌ப்பழ‌ம். ஆனா‌ல் அத‌ற்கு‌ள்ள மக‌த்துவ‌ங்க‌ள் சொ‌ல்‌லி மாளாதவை. வாழை‌ப்பழ‌த்‌தி‌ன் எ‌ய்‌ட்ஸையே எ‌தி‌ர்‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல் ஒரு ‌நி‌மிட‌‌ம் உ‌ங்களு‌க்கு ஆ‌ச்ச‌ரிய‌ம் ஏ‌ற்படு‌ம்.

வாழை‌யி‌ல் லெ‌க்டிக‌ன் எ‌ன்ற ச‌ர்‌க்கரையு‌ம், புரோ‌ட்டீனு‌ம் கல‌ந்து ச‌த்து‌ள்ளது. இதை பே‌ன்லே‌க் எ‌ன்று மரு‌த்துவ உலக‌ம் சொ‌ல்‌கிறது. இது ம‌னித உட‌லி‌ல் செ‌ல்களை உருவா‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் படை‌த்தது. ‌நிறைய தாவர வகைக‌ளி‌ல் இ‌ந்த‌ச் ச‌த்து இரு‌ந்தாலு‌ம், வாழை‌யி‌ல் அ‌திக‌ப்படியாக இரு‌க்‌கிறது.

எனவே எ‌‌ச்.ஐ.‌வி. என‌ப்படு‌ம் எ‌ய்‌ட்‌ஸா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், இ‌ன்த பே‌ன்லெ‌க் ஆனது எ‌‌ய்‌ட்‌‌‌ஸ் வைரஸை சு‌ற்‌றி‌க் கொ‌ண்டு ம‌ற்ற செ‌ல்களு‌க்கு பரவாதபடி பாதுகா‌க்கு‌ம். எனவே எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் அ‌திக‌ம் சா‌ப்‌பிட வே‌ண்டிய பழ‌ம் வாழை‌ப் பழமாகு‌ம். இது எ‌ய்‌ட்‌‌‌ஸ் நோயா‌ளிகளு‌க்கு ம‌ட்டு‌ம‌ல்ல ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ம் இ‌னி‌ப்பான செ‌ய்‌திதா‌ன்.

இனிப்பான தேனுக்கு அடியில் கசப்பான உண்மை!

நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் வணிகமுத்திரையுடன் கூடிய தேனில் கேடு விளைவிக்கும் ஆண்ட்டி-பயாடிக்குகள் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
"உத்தரவாதமாக சுத்தமான" தேன் என்று தங்கள் லேபிளில் போடப்பட்டு விற்பக்கப்படும் தேன்கள் மேலுக்குத்தான் இனிப்பு உள்ளுக்குள் பொதிந்திருப்பதோ கசப்பான ரகசியம். சுற்றுசூழல் மற்றும் விஞ்ஞான மையம் (CSE) நடத்திய அதிரடி ஆய்வில் இந்த உண்மை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
 கண்காணிப்பு பரிசோதனை மையத்தில்  விற்கப்படும் 12 முன்னணி நிறுவனங்களின் தேன் பாட்டில்களை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டது. இதில் டாபர், ஹிமாலயா, பதஞ்சலி, வைத்யநாத், காதி ஆகிய நிறுவனங்களின் தேன் மற்றும் சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்ரேலிய நிறுவனம் இரண்டின் தேனும் பரிசோதனை செய்யப்பட்டது. 11 தேன் மாதிரிகளில் 6-இல் கடுமையான ஆண்ட்டி-பயாடிக்குகள் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
தேனில் ஆண்ட்டி-பயாட்டிக்குகளா? சே! சே! இருக்காது சார்! என்று தானே உடனே சொல்லத் தோன்றுகிறது.? தேனுக்குள் மருந்து எப்படி வந்தது என்பது ஒரு சங்கிலித் தொடர். தேனீக்களை நோயிலிருந்து காக்கவும், அதனிடமிருந்து அதிக தேன்களை உறிஞ்சவும் தேனீக்களுக்கு இந்த ஆண்ட்டி பயாட்டிக்குகள் கொடுக்கப்படுகின்றன. நாம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தினமும் தேனை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்கிறோம்.

ஆனால் இந்த ஆண்ட்டி-பயாட்டிக் விளைவால் ரத்தம், கிட்னி, லிவர், எலும்புகள், பல் ஆகியவை கெட்டுக் குட்டிச்சுவராகும் வாய்ப்புகள் ஏராளம். மேலும் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் கொடுக்கும் ஆண்ட்டி-பயாட்டிக்குகளை இது வேலை செய்ய விடாமல் தடுத்து விடும் என்று சுறுறுச்சூழல் மற்றும் விஞ்ஞான மையத்தின் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. உஷாரான வளர்ந்த நாடுகள் இந்த ஆண்ட்டி-பயாடிக் தேனுக்கு பெரும்பாலும் தடை விதித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் தங்கள் தேனை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பும்போது அந்த விதிமுறைகளின் படி சரிபார்த்து அனுப்புகிறது. ஆனால் உள்நாட்டில் சரியான கண்காணிப்பு இல்லாததனால் இந்த ஆண்ட்டி-பயாடிக் கலப்பு தேனை விற்பனை செய்து வருகிறது. இதுதான் இந்திய நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற இரட்டைத்தர்க்கம்.

கர்ப்பிணிகள் பப்பாளி உண்ணலாமா?

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது.

பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது. கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம். சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து.


இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது. பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும். பப்பாளியில் `பப்பைன்' என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை.

ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?

ஜவுளிக் கடைக்கோ, ஷாப்பிங்குக்கோ மனைவிமார்கள் கூப்பிட்டால் கணவர்மார்கள் 'பீதி' அடைவது  உலகம் முழுவதும் பொதுவானதுதான். ஆனால் ஏன் பெண்கள் பெரும் செலவாளிகளாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் பிரியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு சுவாரஸ்யமான தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது.

அதாவது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் மாதவிடாய் எனப்படும் மென்சஸ்தான் இதற்கு முக்கியக் காரணமாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது மென்சஸ் சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் பதட்டமே ஷாப்பிங் ஆர்வத்தை பெண்களிடையே அதிகரிக்கிறதாம்.

மாதவிடாய் காலத்தில், எந்தக் கட்டத்தில் இருக்கிறார்களோ அதைப் பொருத்தே அவர்களின் செலவு செய்யும் பாங்கும் இருக்கும் என்று ஹெர்ட்போர்டு பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஷாப்பிங் செய்வதற்கும், பெண்களின் ஹார்மோன் மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து புகழ்பெற்ற நூல் ஆசிரியர் கேரன் பைன் கூறியதாவது, பெண்கள் தங்கள் நடவடிக்கைகளின் மாற்றத்திற்கு காரணம் என்னவென்பதைத் தெரிந்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இதன் மூலம் அவர்கள் செலவு செய்வதைக் கட்டுப்படுத்த முடியும். இனி பெண்கள் மென்சஸ் வரும் முன் ஆடைகள் வாங்கச் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கலாம்.

ஏனென்றால், மென்சஸ் சமயத்தின்போதுதான் அவர்களுக்கு அதிக அளவில் செலவழிக்கத் தோன்றும் என்று அவர் கூறினார். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள 450 பெண்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்களிடம் முந்தைய வாரத்தில் அவர்கள் செலவு செய்தது பற்றியும், அவர்களுடைய கடைசி 'பீரியட்ஸ்' தேதி பற்றியும் கேட்டனர்.

இதில் கலந்து கொண்ட பெண்களின் செலவழிக்கும் பழக்கம் மாதம் முழுவதும் மாறிக் கொண்டிருந்தது. மென்சஸ் வரும் முன் இருக்கும் பதட்டத்தில் பெண்கள் ஏராளமான ஆடம்பரப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த பதட்டம் குறைந்ததும் அவர்கள் குறைந்த அளவிலேயே செலவு செய்கின்றனர்.

தோல்விகளின் பின்னர் வெற்றி!

நம் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்துக் செயற்பாடுகளிலும் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புவது இயல்பு. அடுத்தடுத்து தடைகள், தோல்வி கள் ஏற்படும் போது வெறுப்பு ஏற்படுவதும் இயல்பு. அவ்வாறு நிகழும் போதெல்லாம் நான் படித்த சில வெற்றியாளர்களின் தோல்விகளை எண்ணிப்பார்ப்பதுண்டு.

 

கணிணி மூலம் 21ம் நூற்றாண்டில் உலக மக்களின் அன்றாட வாழ்வினையே மாற்றியமைத்த பெருமை, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட் ஸைச் சேரும். 10 வருடங்களுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பணக்காராக திகழ்பவர். 1970ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியேற்பட்டது.பாடசாலையில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை தோல்வியடைந்தவர். இருப்பினும் மனம் தளராது முயன்று, வென்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியானார்.ஐசாக் நியூட்டன் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த கணித மேதைகளுள் ஒருவர். ஒலியியல் மற்றும் புவியீர்ப்பு விதிகள் அவரை தலை சிறந்த விஞ்ஞானியாகப் போற்ற காரணமா னவை. அவர் பாடசாலையில் படிக்கும்போது மிக மோசமாக படிக்கும் மாணவருள் ஒருவர். ஆசிரியர்கள் அவரைப் படிக்க வைக்க பல வகைகளில் முயன்றும் அவை தோல்வியிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட வாழ்விற்குத் தேவையான பல கருவிகளை நமக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் தோமஸ் அல்வா எடிசன். சரித்திரம் போற்றும் விஞ்ஞானியான இவர் பெயரில் 1093 அமெரிக்க கண்டுபிடிப்பு உரிமம் (Patent) உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது. ஆனால் சிறு வயதில் இவருக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்உன்னால் எதுவுமே கற்க முடியாதுஎன்று கூறியிருக் கிறார்.


கணவனைக் காட்டிலும், மனைவிக்கு!!

Monday, September 20, 2010

ஆயிரம் காலத்துப் பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறி வரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 25 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது.

பள்ளிப்பருவம் முடிந்து, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் - மருத்துவம், முதுநிலைப் படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர் செய் என்ற பழமொழி பலருக்கு இயலாமல் போய் விடுகிறது.

அதனால், கணவன் - மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5 ஆண்டுகள் என்ற நிலை மாறி சில தம்பதிகளுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம் கூட ஏற்பட்டு விடுகிறது. சொந்தங்களில் திருமணம் முடிப்பவர்கள், சகோதரியின் மகள் அல்லது அத்தை, மாமன் மகளை திருமணம் முடிப்பது என்பது, சொந்த-பந்தமும், அவர்களின் சொத்துக்களும் வேறு வாரிசுகளுக்கு சென்று விடக்கூடாது என்ற (நல்ல) எண்ணத்தினால்தான்.

அதன் காரணமாகவே பல குடும்பங்களில் கணவன் - மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். webdunia photo FILE சரி, வயது வித்தியாசத்தால், பாலுறவுப் புணர்ச்சியில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா? என்றால், 90 விழுக்காடு இல்லை எனலாம்.

பொதுவாக கணவனைக் காட்டிலும், மனைவிக்கு 5 வயது குறைவாக இருந்தால், முதுமைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க ஏதுவாகும் என்பதாலேயே நம் முன்னோர் இந்த வேறுபாட்டை கடைபிடித்து வந்துள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை குழந்தைப் பேறு, மாதவிடாய் போன்ற இயற்கையான நிகழ்வுகளால், பொதுவாகவே அவர்கள் 45 வயதைத் தாண்டிய நிலையிலேயே பலவீனம் அடைந்தவர்களாகிறார்கள். ஆனால் ஆண்கள் 50 வயதானாலும் கூட பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி இயற்கையான முதுமைக் காலத்திலேயே பலவீனத்தை உணர்வார்கள்.

அதன் காரணமாகவே இந்த வயது வித்தியாசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய சூழ்நிலையில், 10 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்தல் என்பது வெகுசாதாரணம் எனலாம். 26 அல்லது 27 வயதான பெண், 34 அல்லது 35 வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

இதற்கான காரணங்கள் எதுவாக் இருந்தாலும், 10 வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது. அதில் உள்ள சாதக - பாதகங்களைப் பார்த்தல் அவசியமாகிறது. பாலுறவுக்கும், வயதுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாலுறவு என்பது மனதுடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். எந்த சூழ்நிலையில், பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, 35 வயதானவர்களால 26 வயதுடையை மனைவியுடன் பாலுறவு வைத்துக் கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணை அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை அறிந்து, செயல்படுவதல் சிறப்பு.(t.v.)

பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Wednesday, September 15, 2010


சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் கொள்ளை சமபவங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என எச்சரித்துள்ளனர் போலீசார். சமீபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் தான் ஊருக்கு போக இருப்பதை பேஸ்புக்கில் தெரிவித்திருந்திருக்கிறார்.

இதை கண்காணித்துக் கொண்டே இருந்த கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர். இது போன்ற திருட்டு வேலைகளுக்காகவே பீட்டர் ட்ரோவேர் , 22 , ஜோசப் மேச்லேன்னன் , 18, ஆகிய இருவர் சரியான சந்தர்ப்பத்திற்காகவே பல பெஸ்பூக் கணக்குகளை நோட்டம் விட்டு வந்துள்ளளனர்.

அந்த நேரத்தில் கேம்பிரிட்ஜ் ஷிரில் ஒரு குடும்பத்த்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வெளியூர் போவதை அறிவித்தது திருடர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. பெச்பூகில் இருக்கும் முகவரியை வைத்து வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கணினி, பர்ஸ், நகைகள், டிவிடி ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்ல முற்பட்டனர்.

அண்டை வீட்டுக்காரர்கள் இதை கவனித்து போலீசில் புகார் அளித்ததால் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பலமுறை கட்டுரைகளில் கூறிய பின்னரும் நட்பு என்ற பெயரில் தங்கள் சொந்த தகவல்கள் அனைத்தையும் சமூக வலைகளில் கொடுக்கும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது.

இது குறித்த விரிவான கட்டுரையை தமிழ் சி.என்.என் வாசகர்களின் நலனை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன்னர் தொழில்நுட்ப பகுதியிலும் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

குழந்தைகள் சாப்பிடுவது இல்லை. அதுவும் பள்ளிக்கு சென்றுவிட்டால் "லஞ்ச் பாக்ஸை" திறக்காமல் அப்படியே கொண்டு வந்து விடுகிறார்கள். காலையில் கிளம்பும் அவசரத்தில் சரியாக சாப்பிடுவது இல்லை" என பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் கவலை ஏராளம்.

சில பெற்றோர் பள்ளி ஆசிரியையிடம் "மதியம் சாப்பிடறானா என்று பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அன்பு கட்டளையிடுவதை பார்த்திருக்கிறோம்.

பள்ளிச் செல்லும் குழந்தைகள் எந்த மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

காலையில் சாப்பிடாமல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லக்கூடாது. காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் அருந்த செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு கப் பால் தர வேண்டும். ஒரு அவித்த அல்லது ஆம்லேட் செய்த முட்டை சாப்பிடலாம். வேறு எதாவது டிபன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மதியம் எந்த மாதிரியான உணவை கொடுத்து அனுப்ப வேண்டும்?

நூடில்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகள் விரும்புகின்றனவே.... பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அவசரம் காரணமாக அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று பார்க்காமல் எதையாவது ஒரு உணவை திணித்து அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் நூடில்ஸ் போன்றவற்றை மதியம் தருவதை விட எப்போதாவது சாப்பிடலாம்.

என்ன உணவு தந்தாலும் அவசியம் காய்கறி சாலட் கொடுத்தனுப்ப வேண்டும். காரட், பீன்ஸ், முளை கட்டிய தானியம், பெரிய வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் உப்பு, மிளகு சேர்த்து சாலட் செய்ய வேண்டும். சிறிதளவு சீனியும் சேர்க்கலாம்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது?

ஒவ்வொரு நாளும் ஒருவகை உணவு தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள உணவை விதம் விதமாக தர வேண்டும். நாம் விரும்பும் உணவை விட அவர்கள் விரும்பும் உணவை தரலாம்.

அவர்கள் சாக்லேட்டுகளை தானே விரும்புகிறார்கள்... சாக்லேட்கள் சாப்பிடுவது கெடுதியானது. சிறுகுழந்தையாக இருக்கும் போதே பழகி விட்டால் பள்ளிக்கு செல்லும் போது உணவில் நாட்டமில்லாமல் சாக்லேட் சாப்பிட விரும்பும். அதில் தேவையற்ற கலோரி உள்ளது. சத்து ஏதும் இல்லை. தயிர்சாதம் செய்யும் போது திராட்சை, மாதுளை, ஆரஞ்ச் இதழ்களை அதில் சேர்க்கலாம். கேரட் சேர்க்கலாம்.

இவை ஆரோக்கியத்திற்கும் நல்லது. குழந்தைகளை கவரும் விதமாகவும் இருக்கும். தினமும் ஒரு கப் கீரை தர வேண்டும். கீரை தனியாக சாப்பிட தயங்கும் குழந்தைகளுக்கு கீரை சப்பாத்தி, கீரை சேர்த்த அடை தோசை, கீரை புலாவ் போன்றவை தரலாம்.

பள்ளிக்கு சென்று களைத்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் எந்த மாதிரி உணவு தர வேண்டும்?

கடைகளில் கிடைக்கும் பாக்கெட் உணவுகள், வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களை தவிர்க்கலாம். சுண்டல், பயிறு, அவல் போன்றவை தரலாம். தேங்காய் துருவல் சேர்த்த அவல் உப்புமா மிக நன்று. ஒரு கப் பால் தரவேண்டும். பேக்கரி பொருட்களை தினமும் எடுத்துக்கொள்ளக்கூடாது. என்றாவது ஒரு நாள் சாப்பிடலாம்.

இரவில் எவ்வகை உணவு தர வேண்டும்?

இரவில் சாப்பிடாமல் படுக்க கூடாது. எண்ணெயில் பொரித்த உணவை இரவில் தவிர்க்க வேண்டும். காபி, டீ குடிக்க கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவினை தரலாம். பால் தரலாம்.

இரவில் கண்விழித்து படிக்க டீ, காபி சாப்பிட்டால் தூக்கம் வராது என்பது சரியா?

இது ஒரு மன ரிதியான எண்ணம். அறிவியல்பூர்வமாக அப்படி இல்லை.

குழந்தைகள் படிப்பிற்கும் உணவிற்கும் தொடர்பு உண்டா?

சரியான உணவு எடுத்துக்கொள்ளாத குழந்தைகள் சரியாக படிக்காது. சரிசம உணவு இல்லையெனில் பார்வை கோளாறு, தோல் நோய்கள், உற்சாகமின்மை ஏற்படும். கீரை, பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளிடம் "சாப்பிட்டீங்களா" என்று கேட்பது போல் "தண்ணீர் குடித்தீர்களா" என்று கேளுங்கள்.

வாயு நிறைந்த குளிர்பானங்களில் உடலுக்கு தேவையற்ற அதிக கலோரி உள்ளது. இதனால் உடல் எடை கூடும். அவற்றை தவிர்க்க வேண்டும். பழத்தை ஜூசாக்கி குடிப்பதை விட பழமாகவே சாப்பிடுவது நல்லது.

அசைவ உணவுகளை சிறியவர்கள் சாப்பிடலாமா?

வளரும் குழந்தைகளுக்கு எல்லா சத்தும் தேவை. மீன், சிக்கன் போன்றவை சாப்பிடலாம்.

நமது ஊரின் விருப்ப உணவு இட்லியில் எத்தனை கலோரி உள்ளது?

(கலோரி என்பது உணவின் மூலம் கிடைக்கும் சக்தியின் அளவு) 50 கலோரி உள்ளது. அரிசியும் உளுந்தும் சேர்வதால் இட்லி உடலுக்கு நல்லதே. இட்லி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதற்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடலாம் என்பது சரியல்ல. சர்க்கரை நோயாளிக்கு சாப்பிடும் அளவு தான் முக்கியம்.

அபிவிருத்திப் பாதையில் இலங்கை சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

Tuesday, September 7, 2010

 இலங்கை நாடானது சுற்றுலாத்துறைக்கு சிறந்த ஓர் இடமாகவும் உல்லாசப்பயணிகள் விரும்பி வரும் நாடாகவும் உள்ளது. கடந்த காலங்களில் நிலவிய போர்ச்சூழலிலும் யுத்தம் இடம்பெறாத ஏனைய இடங்களுக்கு வந்து போவதை உல்லாசப்பயணிகள் விரும்பியிருந்ததை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்தோம்.

எனினும் உல்லாசப்பயணிகள் அதிகம் விரும்பும் கரையோரப்பிரதேசங்களில் அவர்களுக்கு ஏற்ற சூழல் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. குறிப்பாக பெருநகரங்களை அண்டிய கரையோரப்பகுதி ஹோட்டல்கள் அதற்கேற்ற சூழலில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி கவனிக்க வேண்டியுள்ளது.

தமது விடுமுறை காலத்தை அமைதியாகவும் இரம்மியமான இடத்தில் கழிக்கவுமே உல்லாசப்பயணிகள் விரும்புவர். ஒரு சில கரையோரப்பிரதேச ஹோட்டல்கள் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்தாலும் வாகன இரைச்சல், அசுத்தமான சூழல், பிரதேசத்தை அண்டிய பகுதி மக்கள் சிறுவர்களின் தொல்லைகள், சிறு வியாபாரிகளின் அத்துமீறல்,போதை பொருள் பாவனையாளர்கள், திருடர்கள் என பல இன்னல்களுக்கு உல்லாசப்பயணிகள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

இவற்றை எப்படி தவிர்ப்பது என்பது பற்றிய ஆய்வுகள் அவசியம். உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் எந்தளவிற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றதோ அதே போல் அதை பாதுகாக்கவும் தூரநோக்கு செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான சூழலில் நாம் உல்லாசப்பயணிகள் அதிகம் வருகை தரும் கடற்கரை பகுதியான ஹிக்கடுவைக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. “சுற்றுலாப் பருவமான கடந்த நவம்பர் மாதம் முதல் இவ்வருடத்தின் ஏப்பிரல் வரையான காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 35 சதவீதத்தால் அதிகரித்துள்ளது . அதுமாத்திரமல்ல இலங்கையை உலகிலுள்ள பாதுகாப்பான மற்றும் பிரபல்யமிக்க சுற்றுலா கேந்திரஸ்தலமாக டைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. என்கின்றார் ஹிக்கடுவை கொரல் சாண்ட் ஹோட்டல் தலைவரும் ஹிக்கடுவை சுற்றுலா ஹோட்டல் சங்கத்தின் உப தலைவருமான சுமேத குலதுங்க.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மற்றும் சுனாமி அனர்த்தத்தினாலும் பின்னடைவை சந்தித்திருந்த இலங்கையின் சுற்றுலாத்துறையானது தற்போது படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகின்றமைக்கு இது நல்லதொரு சான்று.

இலங்கையின் தென் பகுதியிலுள்ள சுற்றுலாத்தளங்களாக மாத்தறை,ஹிக்கடுவை,மிரிச,அம்பாந்தோட்டை பெரிதும் பிரபல்யம் பெற்றவை. இயற்கையின் வனப்பு கொட்டிக்கிடக்கும் இந்த இடங்களின் அழகை ரசிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றதாக இங்கு சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் சுற்றுலாசபையால் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்களிலுள்ள மொத்த அறைகள் 14ஆயிரம் ஆகும். இதுவரை 6 இலட்சம் சுற்றுலாபயணிகள் இந்த அறைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவையில் மாத்திரம் 1000 அறைகள் உள்ளதாக கூறப்படுகின்றது .ஆனால் அவற்றில் 200 அறைகள் மாத்திரமே அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதாக ஹிக்கடுவையிலுள்ள சுற்றுலா ஹோட்டல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹிக்கடுவையிலுள்ள 60 சதவீதமான மக்கள் சுற்றுலாத்துறைச்சார் தொழில்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் ஹோட்டல்கள், விடுதி,கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவதோடு சுற்றுலாவழிகாட்டி, படகோட்டி,டெக்ஸி,முச்சக்கரவண்டிகள் சாரதிகள் என பல்வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

அதிகளவு சுற்றுலாபயணிகள் வரும் நாடுகள்

டென்மார்க்,சுவீடன்,நோர்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஹிக்கடுவைக்கு சுற்றுலாவை மேற்கொள்கின்றனர். அதேபோல் ஜேர்மன், பிரான்ஸ்,ரஷ்யா நாட்டவர்களும் தென் பகுதிக்கு அதிகளவில் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஹிக்கடுவை ஹோட்டல்களிலுள்ள 70 அறைகளும் அடுத்த பருவக்காலத்துக்காக ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஹோட்டல் துறையினர் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் இலங்கையிலுள்ள ஹோட்டல்கள் சுற்றுலாபயணிகளுக்கு போதியதாக இருக்காது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலாபயணிகளை அதிகரிக்க அரசு திட்டம்

இதேவேளை 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு 2மில்லியன் சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசு அடுத்த வருடம் விசிட் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் அடுத்த மாதம் இந்திய திரைப்படவிருது வழங்கல் விழா இங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அதிகளவான சுற்றுலாபயணிகள் வருவார்கள் என நம்பபடுகின்றது. அதேபோல் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை இங்கு நடத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

இலங்கை சுற்றுலாச்சபைக்கான தலைவரோ அல்லது செயலாளரோ இதுவரை நியமிக்கப்படாமையால் ஹோட்டல் துறையினர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக சுமேத குலதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சுற்றுலாத்துறை தொடர்பில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வரும் போது அதற்கேற்ப பிரச்சினைகளும் தலைதூக்கத் தான் செய்கின்றன. சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு விசேட மின்சார கட்டணமொன்றை அறவிடுவதற்கான நடவடிக்கையை மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இது எம்மை மேலும் பாதிக்கும் செயலாக அமைகின்றது.

சுற்றுலாபயணிகள் எதிர்நோக்கும் சிரமங்கள்

ஹிக்கடுவைக்கு சுற்றுலாப்பயணிகள் வரவிரும்பாமைக்கான காரணம் அங்குள்ள ஹோட்டல்கள் பாதையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளமையே ஆகும். வாகனங்களில் இரைச்சல் சத்தம் அதிகம் .அதனால் அவர்கள் அமைதியாக பொழுதைப்போக்குவதற்கான சூழல் அங்கு இல்லை என ஹிக்கடுவை சுழியோட்டி பாடசாலை அதிபர் சோமதாஸ தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- இந்த கடற்கரையில் பவளப்பாறைகள் மீன்கள் மற்றும் கடல்ஆமைகளை அதிகமாக இருக்கின்றன .சுற்றுலாபயணிகள் இதனை பெரிதும் ரசித்து மகிழ்கின்றனர. இந்த அழகில் சுற்றுலாபயணிகள் மெய்மறந்து இருக்கும் போது படகோட்டிகள் அந்த மக்களை முட்டிமோதிச் செல்கின்றனர்.இதனால் இவர்கள் காயத்துக்குள்ளான சந்தர்ப்பங்களும் உள்ளன. கடலுக்குள் இறங்கினால் படகில்; முட்டிமோத வேண்டியுள்ளது.வீதிக்கு சென்றால் வாகனத்தில் முட்டிமோத வேண்டியுள்ளது என சுற்றுலாபயணிகள் தெரிவிக்கின்றனர். ஹோட்டல் துறையினரின் எதிர்பார்ப்புகள்

அதிக வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறையிது.இதனை அபிவிருத்தி செய்வதற்கு அரசு உதவும் பட்சத்தில் சுற்றுலாபயணிகளின் வருகையை அதிகரிக்க கூடியதாக இருக்கும் என தெரிவிக்கும் மிரிச பாம் ரெஸ்ட் ஹோட்டல் உரிமையாளர் எட்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இந்த இலக்கை அடைந்துக் கொள்வதற்கு ஹோட்டல் துறையினருக்கு கடன்வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் பொருட்களை இறக்குமதி செய்வதில் வரிசலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதேபோல் இந்த துறையில் ஈபடுவோருக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும்.சர்வதேச தரத்துக்கேற்ப பயிற்சிகள் வழங்குவதன் மூலம் சுற்றுலாபயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க கூடியதாக இருக்கும்.

இதேவேளை மிரிச கடற்பரப்பில் அதிகளவான திமிங்கிலமும் டொல்பின்களும் உள்ளன.இவற்றை முறையாக பாதுகாப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளிடமிருந்து அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே இதனை பாதுகாப்பதற்கான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

அதேவேளை எமது நாட்டு சிற்பிகளின் கை வண்ணத்தால் உருவாக்கப்படும் சிற்பங்களை சுற்றுலாபயணிகள் விரும்பி வாங்குகின்றனர். ஹிக்கடுவையில், நிமால் வுட்காவிங் சென்டர் உரிமையாளர் நிமால் பாரம்பரிய சிற்பகலையை மேற்கொண்டு வருகின்றார். முகமூடி,யாணை மற்றும் கிருஷ்ணரின் சிலைகளை வாங்குவதற்கு சுற்றுலாபயணிகள் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கும் இவர்.இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தால் காலதாமதமின்றி பலகைகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் தனது வியாபாரத்தை தடையின்றி முன்னெடுக்கலாம் என சுட்டிக்காட்டினார்.

அந்நியச்செலாவணியை அதிகளவில் பெற்றுக்கொடுப்பதில் சுற்றுலாத்துறை பாரிய பங்களிப்பை செய்கின்றது. ஆகவே இத்துறையுடன் தொடர்புபட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து. சுற்றுலாத்துறை மேம்படுத்தல் நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்வதன் மூலம் 2014 ஆம் ஆண்டு 2மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இலக்கை அடையக்கூடியதாக இருக்கும்.

-நிரஞ்சனி ரோலண்ட்- .