பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்வது ஒரிஜினல் மார்பகத்தையே அகற்றி விடும்

Thursday, March 24, 2011

பிரேசில் நாட்டை சேர்ந்த மாடலிங் பெண் ஷைலா ஹெர்ஷே. உலகிலேயே மிகப்பெரிய மார்பகம் உள்ளவர் இவர்தான். தன் மார்பகத்தை பெரிதாக்கிக்கொள்வதற்காக இவர் அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது வழக்கம். இவர் 2008-ம் ஆண்டு மே மாதம் 9-வது முறையாக ஆபரேஷன் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் ஒரு முறை தன் தாய்நாடான பிரேசிலில் 10-வது முறையாக ஆபரேஷன் செய்து கொண்டார். இதன் மூலம் அவரது மார்பக அளவு மேலும் அதிகரிக்கப்பட்டது.

இப்படியாக அவர் அடிக்கடி மார்பக அளவை பெரிதாக்க ஆபரேஷன் செய்து கொள்வது வழக்கம். அமெரிக்காவில் இதுபோல ஆபரேஷன் செய்து கொள்வது சட்ட விரோதமானது ஆகும். இதனால் அவர் அமெரிக்காவில் வசித்தாலும், ஆபரேஷன் செய்து கொள்ள தன் தாய்நாட்டுக்கு செல்வது வழக்கம். அங்கு அவர் கடந்த ஜுன் மாதம் 30-வது முறையாக ஆபரேஷன் செய்து கொண்டார். அப்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இப்போது அவர் உயிருக்கு போராடி வருகிறார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அவரது ஒரிஜினல் மார்பகத்தையே அகற்றி விட்டனர்.