காங்கேசன்துறை துறைமுகப் பணிகளில் நேரடியாகக் களமிறங்கியுள்ள இந்தியா!

Thursday, January 13, 2011

காங்கேசன்துறை துறைமுகப் புனரமைப்புப் பணிகளில் இந்தியா நேரடியாக ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பான விஷேட இணக்கப்பாட்டுக்கு நேற்று இந்தியா
வும் இலங்கையும் வந்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்திய நிறுவனமொன்று காங்கேசன்துறை துறைமுக தொழில்நுட்பப் பணிகளில் நேரடியாக ஈடுபடவுள்ளது.

முதற்கட்டமாக இந்த நிறுவனம் இது சம்பந்தமான தொழில் நுட்ப அறிக்கையொன்றைத் தயாரிக்கும்.

காங்கேசன்துறை துறைமுகப் பணிகளுக்காக இந்திய அரசு 70 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.